| கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா? |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| யுகபாரதி ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2010 00:00 |
|
படம் : சந்திரமுகி
![]() கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா? அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா? கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதா? இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா? -- கண்ணில் ஒரழகு கையில் நூறழகு உன்னால் பூமி அழகே உன்னில் நானழகு என்னில் நீயழகு நம்மால் யாவும் அழகே கண்ணதாசன் பாடல்வரி போல கொண்ட காதல் வாழும் நிலையாக கம்பன் பாடிப் போன தமிழ்ப் போல எந்த நாளும் தேகம் நலமாக மழை நீயாக வெயில் நானாக வெள்ளாமை இனி -- கொக்கிப் போடும் விழி கொத்திப் போகும் இதழ் நித்தம் கோலமிடுமா? மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகிற உன்னைப் போல வருமா? வெளி வே-ஷம் போட தெரியாமல் எனதாசை கூட தடுமாறும் பல கோடி பேரின் அபிமானம் உனக்காக ஏங்கும் எதிர்காலம் நீ என் நாடு நான் உன்னோடு மெய் தானே இது - யுகபாரதி
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


