| வீடுவரை உறவு வீதி வரை மனைவி |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| கண்ணதாசன் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2010 00:00 |
![]() ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன? வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி! சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்! விட்டுவிடும் ஆவி பட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு! - கண்ணதாசன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


