• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்

பகிர்ந்து கொள்ள



Tweet


முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

பழந்தமிழ் கவிதைகள்
கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஆலத்தூர் கிழார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011 00:00
குறுந்தொகை:குறிஞ்சி - தலைவி கூற்று 

Indian-motifs-08
கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும் 
எள்ளற விடினே உள்ளது நாணே 
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ 
நாருடை ஒசியல் அற்றே 
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே. 
-ஆலத்தூர் கிழார்.
Tags:
  • ஆலத்தூர் கிழார்
Add new comment
 
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
தீன்மதி நாகனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011 00:00
குறுந்தொகை:குறிஞ்சி - தோழி கூற்று
Indian-motifs-28
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் 
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் 
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் 
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் 
வல்லே வருக தோழிநம் 
இல்லோர் பெருநகை காணிய சிறிதே. 
-தீன்மதி நாகனார்.
Tags:
  • தீன்மதி நாகனார்
Add new comment
 
வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கிள்ளிமங்கலங்கிழார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 04 டிசம்பர் 2011 00:00
குறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று 
Indian-motifs-37
வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு 
யாரா கியரோ தோழி நீர 
நீலப் பைம்போ துளரிப் புதல 
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி 
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த 
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று 
இன்னா தெறிதரும் வாடையொடு 
என்னா யினள்கொல் என்னா தோரே. 
-கிள்ளிமங்கலங்கிழார்.
Tags:
  • கிள்ளிமங்கலங்கிழார்
Add new comment
 
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
நம்பி குட்டுவனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011 00:00
குறுந்தொகை:நெய்தல் - தோழி கூற்று

Indian-motifs-27
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை 
புணரி இகுதிரை தரூஉந் துறைவன் 
புணரிய இருந்த ஞான்றும் 
இன்னது மன்னோ நன்னுதற் கவினே. 
-நம்பி குட்டுவனார்.
Tags:
  • நம்பி குட்டுவனார்
Add new comment
 
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஒக்கூர் மாசாத்தியார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011 00:00

குறுந்தொகை:மருதம் - தோழி கூற்று


ATT4511588


 மனையுறை கோழிக் குறுங்காற் பேடை

வேலி வெருகின மாலை யுற்றெனப்

புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய

பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்

கின்னா திசைக்கும் அம்பலொடு

வாரல் வாழிய ரையவெந் தெருவே.

 

-ஒக்கூர் மாசாத்தியார்.

Add new comment
 
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
வாயிலான் தேவனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011 00:00
குறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று

Indian-motifs-14
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக் 
கறவை கன்றுவயிற் படரப் புறவிற் 
பாசிலை முல்லை ஆசில் வான்பூச் 
செவ்வான் செவ்வி கொண்டன்று 
உய்யேன் போல்வல் தோழி யானே. 
-வாயிலான் தேவனார்.
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
  • புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
  • புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
  • அம்ம வாழி தோழி காதலர்
  • கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 20

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.