• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



பித்தனானேன் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
நிலவை.பார்த்திபன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012 00:00

 

 

நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!

 

-நிலவை.பார்த்திபன்

 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.