| யான் வழிபடும் தெய்வம் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| கவிமாமணி மீ.விசுவநாதன் ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 00:00 |
![]() விதையே இல்லா விண்வெளி மூலத்தைக்
கதையா சொல்லிக் கணக்கிட முடியும் ? எல்லாத் திசையும் இன்பம் கண்டவன் சொல்லையா தேடுவான் சுகத்தை விளக்க ? கல்லுள் தேரை கசியும் மூச்சில் நல்லதோர் கவிதை நயத்தை ரசித்தோன்; சொட்டுத் தேனைச் சுவைக்கும் போதே கொட்டும் தேளின் கொடுமை மறந்தோன்; கட்டுக் கூந்தலார்க் கன்னியின் காதல் பட்டும்,,யோகப் பயிற்சியைப் பெற்றோன்; பிச்சை கேட்கும் பிழைப்பை உணர்ந்தே பச்சை வயலின் பார்வை அறிந்தோன்; விரிந்த வானில் திரிந்த போதே தெரிந்த மேடு பள்ளம் தெளிந்தோன்; வாழ்வில் மயங்கும் வசதியைப் பெற்றும் தாழ்வில் உழலும் வறுமையைப் புரிந்தோன்; அச்சம்,அடிமை, ஆணவச் சிறுமை துச்சம் என்றே துன்பம் கடந்தோன்; பறவை, பூச்சி, பருவக் குழந்தை, நிறமெலாம் ஒன்றெனத் தியானம் செய்வோன்; அடுப்பில் தெரியும் அனலைக் கொஞ்சம் சொடுக்கிப் பார்த்துச் சொந்தம் சேர்த்தோன்; பக்குவ மனத்தைப் பரிச்சயம் கொண்டோன் எக்குல மாயினும் என் குல தெய்வமே! - கவிமாமணி மீ.விசுவநாதன்
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


