இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| மனப்பறவை |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| புதியமாதவி ஆல் எழுதப்பட்டது |
| திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 00:00 |
![]() நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில் துடிக்கிறது ரத்தம் கசிய கசிய சன்னல் கம்பிகளின் இரும்பு பிடிகளுக்கு நடுவில் கதவுகள் திறக்க காத்திருக்கிறது போதும் போதும் பறந்தது போதுமென்று தடவிக்கொடுக்கிறது காற்று. சிறைகளை உடைத்து வெளியில் வந்துவிடு இரவோடு இரவாக அழைக்கிறது நிலவு. ஆகாயமே சிறையாகிப் போனதால் சிறகுகளை எரித்த நெருப்பின் வெளிச்சத்தில் கூண்டுக்குள் இடம்தேடும் மனப்பறவை - புதியமாதவி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


