| வட்டம் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| அபிமன்யு ராஜராஜன் ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 00:00 |
![]() இதுதான் விதியென்று
யார் சொன்னாலும் கேளேன்! எல்லாரும் செய்வது போல் ஒருபோதும் செய்யேன்! இது இது இப்படித்தான் என்பதெல்லாம் புரிந்ததேயில்லை எனக்கு! விமர்சனங்கள் எல்லாம் பாதித்ததேயில்லை என்னை! அன்னை தந்தை தம்பி தமக்கை உறவு பாசம் கூட உறுத்துவதில்லை உள்ளத்தை! காதல் பார்வையிலோ மனைவியின் அரவணைப்பிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை என்னுள்! தோழமை எல்லாம் கூட தூரத்தில் தான்! மழலையின் சிரிப்புகூட ஒரத்தில் தான்! என் வட்டத்திற்குள் விட்டதில்லை யாரையும்! ஆனால்.. வாழ்வின் ஒரு நாள்கூட வாழ்ந்ததில்லை நானும்! - அபிமன்யு ராஜராஜன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


