இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| அக்கரைப் பச்சை |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| மாயாண்டி சந்திரசேகரன் ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 26 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() சக்கரை வாழ்க்கையெண்ணி அக்கரைசெல்வர்
சக்கர வாழ்க்கை இதுவெனப் புரிந்து கொள்வர் வறுமையை வெல்ல வாடிகனும் செல்வர் வெறுமையை வெல்ல இதுவல்ல வழியென உணர்ந்து கொள்வர் வறுமையின் கருமை வெந்து சாம்பலாகக் கூடும் வாழ்வில் வெறுமையோ செந்தீயாய் தினம் எரியும் சொத்தும் கிடைக்கும் பத்தும் கிடைக்கும் சொகுசான வீடு கார் எனப் பல கிடைக்கும் எல்லாம் கிடைத்தது போல ஊருக்குத் தெரியும் உள்ளில் மெழுகாய் உருகுவது யாருக்குப் புரியும்? சுகம் தொலைத்து நித்தம் முகம் தொலைத்து அகம் நனைத்து சொந்தம் தினம் நினைத்து வேதனையாய்க் கழியுது வாழ்க்கை இங்கு! வேரை மறந்து ஊரை மறந்து உற்றார் உறவினர் சுற்றம் மறந்து பற்றில்லாமல் கிடைக்குது பல வெள்ளிப் பணம் கொள்ளியாய் மாறி நித்தம் கொல்வது யார்க்கு புரியும்? சொர்க்கத்திலும் சோகம் உண்டு நரகத்திலும் சில இன்பம் உண்டு தங்கத்திற்கும் சில குறைகள் உண்டு தகரத்திற்கும் நல் குணங்கள் உண்டு தலைமுறையை மாற்றிக் கொள்ள தள்ளிச் செல்வதில் தப்பேதும் இல்லை நடைமுறை இதுவெனப் புரிந்து கொண்டால் - நெஞ்சில் அடைமழைக் காலமும் விடுமுறை எடுத்து கொள்ளும். அக்கறையாய் வாழ்வை அமைத்துக் கொண்டால் எக்குறையும் சற்று எட்டியே நிற்கும் இக்கரையோ அக்கரையோ எக்கரையும் சக்கரையாய் இனிதே கரையும்! - மாயாண்டி சந்திரசேகரன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


