• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

திரையில் மலர்ந்த கவிதைகள்
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கவி கா.மு.ஷெரீப் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2009 00:00

படம் : டவுன் பஸ்

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா? – என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே

பட்டு மெத்தை விரிச்சு வச்சேன் சும்மா கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கெடக்குது
தலையை வாரி பூ முடிச்சேன் வாடி வதங்குது – சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கெடக்குது

வழியை வழியை பாத்து பாத்து கண்ணும் நோவுது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது (சிட்டுக்குருவி)

- கவி கா.மு.ஷெரீப்

Add new comment
 
அன்பாலே அழகாகும் வீடு அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
யுகபாரதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 07 ஜூலை 2009 00:00

படம்: பசங்க

அன்பாலே அழகாகும் வீடு


அன்பாலே அழகாகும் வீடு....
ஆனந்தம் அதற்குள்ளே தேடு...
சொந்தங்கள் கை சேரும்போது....
வேறொன்றும் அதற்கில்லை ஈடு...

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

வாடகை வீடே என்று
வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது.... ஓ.....
சோகமே வாழ்க்கை என்று
சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது....
மாறாமல் வாழ்வுமில்லை
தேடாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே
கலைகின்ற மேகம் போலே
காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே....

அன்பாலே அழகாகும் வீடு....
ஆனந்தம் அதற்குள்ளே தேடு...
சொந்தங்கள் கை சேரும்போது....
வேறொன்றும் அதற்கில்லை ஈடு...

பாசமே கோவில் என்று
வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே....
ஆ.. நேசமே மாலை என்று
நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே ஆ...
கூடினால் கோடி நன்மை
சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே
ஏணியே தேவையில்லை
ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறும் காணலே.....

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

- யுகபாரதி

Add new comment
 
கடவுள் பாதி மிருகம் பாதி அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2009 00:00

படம் : ஆளவந்தான்

Thank you! http://www.touregypt.net/featurestories/sphinx1-16.jpg


கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால்... கடவுள் தின்று கடவுள் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே...

நந்தகுமாரா நந்தகுமாரா
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா?
குரங்கில் இருந்து மனிதன் என்றால்
மனிதன் இறையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா
தேவ ஜோதியில் கலப்பாயா?

நந்தகுமாரா....

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்வரை குளிர்கிறதே
எல்லா துளியும் குளிரும்போது
இருதுளி மட்டும் சுடுகிறதே

நந்தகுமாரா நந்தகுமாரா
மழைநீர் சுடாது தெரியாதா?
கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான்
வெண்ணீர் துளி என அறிவாயா?
சுட்ட மழையும் சூடான மழையும்
ஒன்றாய் கண்டவன் நீதானே
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவள் நீதானே

- வைரமுத்து

Add new comment
 
அத்திக்காய் காய் காய் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கண்ணதாசன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2009 00:00

படம் : பலே பாண்டியா

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ!
என்னுயிரும் நீயல்லவோ..!

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ..

உள்ளமெலாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையென்னை காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா

- கண்ணதாசன்

Add new comment
 
கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2009 00:00

படம் : கிழக்குச் சீமையிலே 

 Thank you! http://www.asiangemsstore.com/bullockcart.JPG

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...

வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு


அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளக்கி ஒத்த எடந்தானே
தவளைக்கும் பொம்பளக்கும் ரெண்டு எடந்தானே

- வைரமுத்து 

Add new comment
 
ஆசையிலே பாத்தி கட்டி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கங்கை அமரன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 09 ஜூன் 2009 00:00

படம் : எங்க ஊரு காவல்காரன்

Thank you! http://newsimg.bbc.co.uk/media/images/41774000/jpg/_41774772_paddy_ap416.jpg


ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி..
ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி..
நானா பாடலியே.. நீதான் பாட வச்சே..

வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது...
பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு
விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு
நீ வாயேன் வழி பாத்து

கண்ணுதான் தூங்கவில்லை.. காரணம் தோணவில்லை
பொண்ணு நான் ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்லை
கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி.. நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே

- கங்கை அமரன்

 

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • கண்ணில் பார்வை போனபோதும்
  • இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை?
  • வாரணமாயிரம் சூழ வலம் செய்து
  • பனி விழும் மலர் வனம்
  • அனல் மேலே பனித்துளி
« தொடக்கம்முன்1112அடுத்ததுமுடிவு »

பக்கம் 11 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.