| கொடியிலே மல்லிகப்பூ |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| வைரமுத்து ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011 00:00 |
|
படம்: கடலோரக் கவிதைகள்
![]() கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால் பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது உறவும் தெரியாது உலகம் புரியாது பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கன்னா - வைரமுத்து |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


