| நான் சொன்னதும் மழை வந்திச்சா |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| செல்வராகவன் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011 00:00 |
![]() நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி என் கண்ணில பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சு நின்னு போச்சு காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிப் போட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது கருவாட்டு கொழம்பா...நீயும் ருசி ஏத்துற.. ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற.. அடி போடி போடி போடி பொட்ட மயிலே ஓலை ஏதும் வந்திச்சா உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு கிளி வந்து பதில் சொல்லிச்சா கரு நாக்கு கார புள்ள கரு பட்டி நிறத்து முல்ல எடுபட்ட நினைப்பு தொல்ல நீ...களவாணி.. ஓ..கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற.... ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற.. ஆடு...ஆடு... ஆத்தாடி.. ஆடு மேய்க்க ராசா வந்தாரா எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா அடி போடி போடி போடி முட்ட கண்ணி கட்டம் கட்டி பாஞ்சேன் அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும் கனவில தீ மிதிச்சேன் கண்ணாடி வளையல் தாறேன் காதுக்கு ஜிமிக்கி தாறேன் கழுத்துக்கு தாலி தாறேன் நீ....வரியாடி... கருவாட்டு கொழம்பா.... நீயும்.......ருசி ஏத்துற.... - செல்வராகவன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


