| வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| பழனி பாரதி ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 04 மே 2010 00:00 |
|
படம்: நினைத்தேன் வந்தாய்
![]() வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம் கண்கள் அறியாத காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒழியாதே பெயரை கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன் என் வழியென்ன உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ - பழனி பாரதி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


