| ஒரு பொன் மானை நான் காண |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| டி. ராஜேந்தர் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2010 00:00 |
![]() ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம் சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழ ரசம் அதைக் காண்பதில் எந்தன் பரவசம் தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரைப் பூ மீது விழுந்தனவோ இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள் ஜதி என்னும் மழையினிலே ரதியிவள் நனைந்திடவே அதில் பரதம் தான் துளிர்விட்டு பூப்போலப் பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது – எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம் அரங்கேற அதுதானே உன் கன்னம் மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம் இடையில் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள் கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையைக் கண்டேன் அந்தக் கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி மதிதன்னில் கவி சேர்க்குது எந்தன் மதிதன்னில் கவி சேர்க்குது - டி. ராஜேந்தர்
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


