| பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| கவிஞர் வாலி ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 23 மார்ச் 2010 00:00 |
|
படம் : வருஷம் 16
![]() பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் நான் தான் ஒரு ராகம் தாளமும் கேட்பேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் தூரத்தில் போகின்ற மேகங்களே தூரல்கள் போடுங்கள் பூமியிலே வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களே ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள் பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகல் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட - கவிஞர் வாலி
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


