• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்

பகிர்ந்து கொள்ள



Tweet


முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

திரையில் மலர்ந்த கவிதைகள்
கள்வரே கள்வரே அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 00:00
படம்: ராவணன்

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகின்றதா?

 

-வைரமுத்து

 

Add new comment
 
அம்மா உன் பிள்ளை நான் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2012 00:00

படம்: நான் கடவுள்

 

 

 

 

 

 

 

 

 

 

அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
ரோட்டோர வாழ்வு என்றே விதியானதே
விதியெனும் எழுத்தெல்லாம்
விழிநீரில் அழியும் ஓர் நேரம்
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்

 

- வாலி

Tags:
  • naan kadavul
  • vaali
Add new comment
 
கனாக் காணும் கண்கள் மெல்ல அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012 00:00
படம் - அக்னி சாட்சி

Vaali


கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி!
விளக்கு ஏற்றி வைத்தால் கூட,
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நிழல் போலத் தோன்றும் நிஜமே!


“நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான்,
உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
என் நெற்றியில் நீறு போல்,
திருநீறு போல் இட்டுக்கொள்கிறேன்”


புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று,
நிகழ்காலம் கூறும் கண்ணே!
நிகழ்காலம் கூறும் கண்ணே!


- வாலி


Tags:
  • vaali
Add new comment
 
வெண்பனியே முன்பனியே அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
பா.விஜய் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 03 ஜனவரி 2012 00:00
படம் : கோ
jeeva-karthika-ko

வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே

வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள்
என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே

ஒரு இமை குளிர
ஒரு இமை வெளிர
உனக்குள்ளே உறங்கினேன்
ஒரு இதழ் மலர
மறு இதழ் உலர
உனை அதில் உணர்கிறேன்

ஆதலால் அகம் மலர்ந்தது காதலால்
காய்ததால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையின் இனம்

வெண்பனியே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
முன்பனியே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

everything is chill now
all is gonna be alright
oh I will be there
I will be there for you
everything is chill now
frozen in love
lets warm and coze around now

இமைகளில் நனைந்து
இரு விழி நுழைந்து
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
எனக்குள்ளே எனக்குள்ளே

எவ்வனம் அதில் இவளோரு செவ்வனம்
சோவிதம் அதில் அலைந்திட வா நிதம்
கணம் கணமே

வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே

 

பா.விஜய்

Add new comment
 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
சினேகன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011 00:00
படம் : ஆடுகளம்
aadukalam

 

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள

அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே
===
புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்தி போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தில் காய்கிறேன்
உனை தேடியே
மனம் சுத்துதே
ரா கோழியாய்
தினம் கத்துதே
உயிர் நாடியில்
பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில்
எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நா சருகாகி போனேனே பாத்த பின்ன
நா தல காலு புரியாமா
தர மேல நிக்காமா
தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி நெஞ்சு அனல் ஆகவே
தீ அள்ளி ஊத்துர
நூல் ஏதும் இல்லாமலே
உசுர ஏன் கோக்குர
எனை ஏனடி
வதம் செய்கிறாய்
இமை நாளிலும்
உலை வைக்கிறாய்
கட வாயிலே
எனை நெய்கிறாய்
கண் ஜாடையில்
எனை கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே


-சினேகன்
Add new comment
 
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
பா. விஜய் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011 00:00
படம்: வின்னர்


எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

(எங்கிருந்தாய்...)

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

(எங்கிருந்தாய்...)

இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

(எங்கிருந்தாய்...)
-பா. விஜய்
 

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • தெய்வம் வாழ்வது எங்கே
  • இறகைப்போலே அலைகிறேனே
  • உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
  • மைனா மைனா
  • இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
  • தத்தி தாவும் paper நான்
  • விளையாடு மங்காத்தா
  • கொடியிலே மல்லிகப்பூ
  • நான் சொன்னதும் மழை வந்திச்சா
  • பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 21

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.