• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
உயிரின் வலி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
எஸ் வைத்தீஸ்வரன் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 05 ஆகஸ்ட் 2010 00:00
உயிரின் வலி
இடி இடிக்கிறது
பாலத்தின் மேல், இடையிடையில்
ரயிலோட்டத்தால்

அதனடியில்
இரும்பை நீட்டி வளைத்து
தீப்பொறி பரக்க ஓலமிடும்
வெல்டிங் கடைகள்,
படை வரிசை போல்.

அதை யொட்டிய வளைவில்
அரைத்து மாளாமல்
அலறுகிற மாவு யந்திரங்கள்
இவை நடுவில்,
உடம்புக் கடையில் தொங்கும்
ஊதிகள் பலூன்கள்
பூனை நாய், பொம்மைகள்
கூச்சலிட, புழுதியில்
பிழைப்புக்கு நகரும்
மனிதக் கால்கள் ஆயிரம்.
ஈதத்தனைக்கும் அடியில்
இரண்டு முழக்கந்தலுக்குள்
சுருண்டு முனகுகிறானே
நிஜமாக ஒரு மனிதன்,
அவல் ஈன ஒலிகள்
அபோதும் விழக்கூடும்,
ஏதாவது காதுகளில் ?
ஏற்கெனவே
எறும்பு மொய்க்கத்
தொடங்கிவிட்டது,
அவன் வாய் முனையில்...
- எஸ் வைத்தீஸ்வரன்
Add new comment
 
அமரர்.அருள் மா.இராஜேந்திரன் - கவிதாஞ்சலி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
மன்னார் அமுதன் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 04 ஆகஸ்ட் 2010 00:00
அமரர்.அருள் மா.இராஜேந்திரன்
பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா  சிறப்புகள் எல்லாம் மெய்யே

ஆண்டுகள் நாற்பதாய் அருள்மா புரிந்த
அரும்பணி உரைப்பது மன்றக் கடமை
ஆற்றிய பணியில் குறைநிறை அளந்து
குற்றம் பரப்புதல் சிலரது மடமை

அருள்மா அவர்கள் அணிந்தது வெண்மை
ஆடைகள் போலவே உள்ளமும் தும்பை
அடியவன் தோளிலும் அருள்மா கைகள்
ஆதரவாகத் தொட்டது உண்மை

வருவார் அமர்வார் வார்த்தைகள் மொழியார்
வாசலில் காண்கையில் புன்னகை மொழிவார்
இலக்கிய உரைகளை இயம்பி அமர்கையில்
இனிதிலு   மினிது இயம்பிய தென்பார்

அருளின் கதைகள் எல்லாம் விதைகள்
கருப்பொருள் செறிவைக் கதைத்தனர் பலபேர்
கதைகளின் மாந்தர் கண்ணில் படுகையில்
விதைகளில் பலது விருட்சமாய் வளரும்

வற்றிய கிணற்றில் தவளைகள் போலே
வாடயிலே நீர் ஊற்றினீர் எம்மில்
பற்றிய பிடியைத் தளர விடாதே
வருவாய் விரைவாய், உயர்வாய் என்றீர்

தூற்றிப் பழகா போற்றும் குணத்தார்
ஆற்றிய பணிகள் அத்தனை அருமை
கற்றதை எல்லாம் கைமண் அளவாய்க்
கருதியே அருள்மா கதைத்தது அருமை

பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா  சிறப்புகள் எல்லாம் மெய்யே


-   மன்னார் அமுதன்
Add new comment
 
சில முற்றுப் புள்ளிகள் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சேவியர் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 02 ஆகஸ்ட் 2010 00:00
சில முற்றுப் புள்ளிகள்
முடிவுகள் இல்லாத
முடிவு தேடும்
பயணத்தில் நான்.

சாலைகளின் மீதான
பயணமும்,
சேலைகளின் மீதான
சலனமும்,

பக்கங்களைத் தாண்டி ஓடும்
வாக்கியங்களும்,
வாழ்க்கையில் தங்கி விடும்
பாக்கியங்களும்,

எல்லாம்
ஏதோ ஓர்
முற்றுப் புள்ளி முனையில்
அறையப்பட்டு
இறந்து போகின்றன.

சிரிப்புகளின் நுனிகளோ,
இல்லையேல்
கசப்பின் கனிகளோ,
எதுவுமே
எல்லைகளற்ற எல்லையை
கொள்கையாய் கொண்டதில்லை.

இன்னும் சிலநாள்
இருக்காதா எனும்
ஆசைக் கனவுகளை
வெளிச்சம் வந்து இழுத்துச்
செல்வது இயற்கை தானே !

முடிவு
முடிவு தான்.
தூண்டிலில் சிக்கிய மீன்
மீண்டும் ஒருமுறை
நீந்த முடிவதில்லை.

முடிவு
ஆரம்பம் தான்...
தூண்டில் மீனின் மரணம்
ஆகார தேவையின்
ஆதாரமாய் விடிவதுண்டு.

முற்றுப் புள்ளிகள்
முற்றுப் பெறுவதில்லை என்பதும்
முற்றுப் பெறாதவற்றிற்கு
முற்றுப் புள்ளிகளே
இல்லை என்பதும்
இலக்கணங்களில் இல்லை.

ஆனாலும்
சில
இடம் மாறிய புள்ளிகள்
கோலத்தின் தூண்கள் போல
வரவேற்புக் கம்பளம்
விரிப்பதுமுண்டு.

நானும் ஆசைப்படுகிறேன்,
முற்றுப் புள்ளியை
மையப்புள்ளியாக்கிய
ஓர்
வட்டமாய் வாழ.

- சேவியர்
Add new comment
 
முதிர் இளைஞா... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சு.மு.அகமது ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2010 00:00
முதிர் இளைஞா
இருளடர்ந்த அறையின்
வெக்கை பிதுக்கும் தருணங்களில்
கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய்
பாரம் சுமக்கும் மனது

வலியின் உள்வெளியில்
சிரையாய் புடைத்த நினைவு
நிமிரா நாயின் சுருண்ட வாலாய்
மரவட்டையின் கணக்கற்ற கால்களின் நீட்சியாய்

யதார்த்த பரிமாற்றத்தின் பகிர்ந்தளிப்பு
நுகர்ந்து செறிக்கும் நிலைமாற்றம்
உணர்ந்து திளைக்கும் பொழுதில்
அருகாமையில் புணரலின் புதுமொழி

வெளிச்சப்பரவுதலில் மிரண்ட
பிணைந்த பல்லிகளின் கண்களில் காமத்தின் மிச்சம்

அனிச்சையாய் கைகள் துழாவ
விளக்கின் உமிழ்தலாய் பரவுகிறது
உணர்வுகளுக்கான வடிகால்
கறுமை விரட்டும் வெண்பட்சியாய்.

- சு.மு.அகமது
Add new comment
 
வாராமைக்கு அழிதல் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
கி.கண்ணன் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 00:00
வாராமைக்கு அழிதல்
மானசிகனே
எங்கு போனாய்!

உடம்பிலிருக்கும்
உயி​ர் காணோம்

இமை சேர்க்கும்
துயில் காணோம்

மூவேளை பசிக்குமேயந்த
குடல் காணோம்

நீதந்த நாணம்
முகத்தில் காணோம்

பருக்கள் இரண்டில்
இருக்க காணோம்

நெய்யற்ற விளக்கு
ஒளியிடுவதில்லை

பெண்ணரசி மேனியில்
சுயநினைவில்லை

சுயம் புடைபெயர்ந்து
மாயமாய் போனது

போனதால்…

பொன்னிறம் பசலை
உடுத்திக் கொண்டது

வந்தால்…

ஓர்கட்டை ஆவேன்
வரமாட்டானாயின்-
உடன்கட்டை ஏறுவேன்

அவர்-
கைபடா பூச்சர​ம்

மண் தின்னட்டும்
தீ தின்னட்டும்

வலக்கண் துடிக்கிறது
வருவானா?

இடக்கண் வழியே
வெளியேறி போவானா?

எங்கு போனாய்…

“திரும்புவேன் என்றீர்

ஆண்கள் சொன்னால்

அதற்கு-
வாராது போவேனென்று
பொருளா”?

நம்ப வைத்தீர்

கன்னி விழியிற்
அம்பு வைத்தீர்

தீ சாட்சியோடு
அம்மி மிதித்து
திருமணம் முடிப்பாய்
என்றிருந்தேன்
உன்மனமே-
அம்மியாய் இருப்பதை
இக்கணம் கண்டுணர்ந்தேன்.

ஆடவன் காதல்
உடலோடென்பது மெய்தான்

உடலே மெழுகாய்
உச்சியே திரியாய்

காதல் தீயினில்
கடைசிவரை-
உருவழிப்பது பெண்தானே!

- கி.கண்ணன்.
Add new comment
 
இரு பக்கங்கள் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 28 ஜூலை 2010 00:00
இரு பக்கங்கள்
காலையின் ஒளியில்
கண்கள் திறக்கும்
கமலங்கள் ஒரு பக்கம்
மாலையின் இருளில்
சேலையை அவிழ்க்கும்
குமுதங்கள் ஒரு பக்கம்

தண்ணீர் தேடித்
தவிக்கும் வேர்களின்
தாகங்கள் ஒரு பக்கம்
புண்ணீர் நாறும்
பூமியில் பெய்யும்
மேகங்கள் ஒரு பக்கம்

விழிகள் அணைந்தவர்
சமாதியில் எரியும்
விளக்குகள் ஒரு பக்கம்
வழியினில் இருளில்
ஒளியினுக் கேங்கும்
விழிகள் ஒரு பக்கம்

கரிந்த சிறகுடன்
சுடரில் துடிக்கும்
விட்டில்கள் ஒரு பக்கம்
விரிந்த சிறகுடன்
கூண்டில் துடிக்கும்
பறவைகள் ஒரு பக்கம்

புத்தனுக் காகப்
பொன்னிழல் விரிக்கும்
போதிகள் ஒரு பக்கம்
சித்தன் ஏசுவின்
செம்புனல் குடிக்கும்
சிலுவைகள் ஒரு பக்கம்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • மின்னல் விழுதுகள்!
  • என் பெயர்...
  • கோரமுகம்
  • உரிமை
  • உன்னையே நினைப்பதனால்...
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 5 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.