• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
வினைத் தொகை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 00:00
வினைத் தொகை,எழிலி
உறுதுன்பம்!

வயிற்றைக் குழைத்து
உடலைக் குறுக்கி
புற்றுக்குள் பாம்பாய்

மடங்கி நெளிந்து,

கால்களைப் பின்னி
முதுகின் கிரீடமாக்கி!

தாளம் தப்பாமல்
அடி சறுக்காமல்
உச்சி முதல் உள்ளங்
கால் வரை ஆட்டம்
காண  -
களைகட்டியது
கழைக்   கூத்து!

டோலக்கு அடிக்கும்
மனிதனுக்கு !

புல்லாக்குப்போட்ட
அவனின்  மனைவிக்கு!

அலுமினியத் தட்டில்
பிச்சை  திரட்டும்
சிறுவனுக்கு!

வளையத்திற்குள்
உடல் ஒடுக்கி,
உயரே கட்டிய
கயிற்றில்  கால்
பொருத்தி,
ஆகாசத்தையும்
பூமியையும்
தன் நெற்றிப் பொட்டில்
வசப்படுத்தி,
பின்னுக்கும்
முன்னுக்குமாய்
லாவகம் செய்யும்
உழைப்பாளி அவளின்
ஒவ்வொரு நாளைய
வலி
ஒருபோதும்
புரிதலில்லை!

அந்தச் சிறுமியின்
சார்பில்
நமக்கோ - ஒப்புக்கு
உச்சுக்
கொட்டலும்  ஒரு ரூபாய்
பிச்சையிடுதலும்  தவிர
பேருதவி  வேறொன்றில்லை!

- எழிலி
Add new comment
 
இல்லவை நகுதல் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
கி.கண்ணன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 00:00
இல்லவை நகுதல்
அல்லவை சொல்லல்
ஆனந்தம் கள்ளி

முற்றா இளமுலையார்
உற்று நோக்குவான்

சொல்லாது கைபிடித்து
கட்டிலுக்கழைப்பான்

தப்பென்று விளம்புவோர்
தலையிலடிப்பான்

மடவான்-
செய்யும் செயலோ?

பரத்தைய​ர் இல்லேகி
உறவாடி களிகூர்ந்து

அடங்காத காளையனாய்
மடக்கினான் என்னை

காமமிகுதி-
சுந்தர இதழ் சுவைக்க
கட்டளை இட்டது

கட்டுக் குழையா தளிர்மேனி
கட்டிபிடித்ததில் கரைந்தது

போதுமென்னும் வா​ர்த்தை
இல்லாமல்போய்-
போதலையே என்றது
என்பெண்மை

மென்மை உவமை
திண்மை உண்மை

பேரின்பம் எது?

“கழனி பாய்ந்த
வாய்கால் நீர்
நிரம்பியதும் திரும்பி
கழனி நீர் வாய்கால் வருமே
அதுதான்-

பேரின்பம்
“சமபோகம்” என்பதன்
சாத்திர பெயர்

சிற்றின்பம் எது?

வேர்க்க வே​ர்க்க
காரியம் முடித்து
அவசரத்தில் அணு​சிந்தி
ஓய்ந்து போதல்

இதில்-
இருவருக்கும் திருப்தியின்மை
“ஒருதலையான் காமம்”
திருவள்ளுவர் உரைத்தது
என-
இல்லவைச் ​சொல்லி
நகைத்தாள்

மாலை யணிந்த
மார்பன்

சீர்மல்கும் மதிமுகத்தான்
முறிமேனி

முயங்க மாட்டேன்
எதை இழந்தாலும்
கற்பு இழக்கடமாட்டேன்

பூப் பூத்தால்
கொடிக்கு மதிப்பு

கற்பு-
கன்னிக்கு மதிப்பு

பூ பறித்தால்
வதங்கி போகும்

கற்பு தவறினால்
இ​ழிவு நேரும்

ஆதலின்-
ஊடமாட்டேன்

பூத்தப் பூ
கொய்த முனைந்தால்
மூடமாட்டேன்…

என-
இல்லவைச் சொ​ல்லி நகைத்தாள்

-  கி.கண்ணன்
Add new comment
 
கிராமத்து காதலி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
முகவை சகா ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2010 00:00


என் வீடு அந்த கடைசியில்
என்றால்
உன் வீடு இந்த கடைசியில்

என் வீட்டருகில் குளமும்
குளம் சுற்றி பூக்களும்
உன் வீட்டில் "கும்" என்று நீயும்
உன் கூந்தல் நிறைய பூக்களும்

தண்ணீர் எடுக்க என் வீடு கடப்பாய்
அதை நான்
நீ வரும் பொழுது
தீபாவளியாய்
போகும் பொழுது
பொங்கலாய்
நினைப்பேன்.

உன் நிறை குடம் தழும்பி உன்னை
அனைக்க தாவுவது தெரியாது உனக்கு
ஆனால் நான் ஓரக்கண்ணால் பார்ப்பதை மட்டும்
"பரதேசி" 'பார்க்குது பார் ' என்பாய்

நீ பொய் சொல்ல மாட்டாய்
நான் பரதேசி தான்
உன் தேவதை உலகத்தில் மறதியாய்
பிறந்ததற்கு மன்னித்து விடு!

வழியில் தோழி வந்தால்
குடத்தில் நீர் எடுத்து
முகத்தில் தெளிப்பாயே
அதில் பன்னீர் எல்லாம்
பரதேசம் போய் விடும் போ!

ஒரு நாள் நீ தெளித்த நீர் உன் தோழி மீது படாமல்
என்மீது பட்டதும் உன் பற்கள் உதடு கடித்ததே
அன்று தண்டனையை தப்பாய் கொடுத்து
தப்பித்துவிட்டாய் என நினைத்தேன்

நீயும் நானும் காதலித்த பிறகு
என் கை ஓர் நாள் உன்னை கட்டி அணைத்தது
நீ ஒரு நிமிடம் மௌனமாகி பின்பு என் உதட்டில்
உன் உதடு பதித்தாய்

அன்று தான் புரிந்தேன்
ஒரு சில தவறுகளுக்கு ஒருசில
தவறான தண்டனைகள் தான்
சரியாக பொருந்தும் என்று

- முகவை சகா
Add new comment
 
நல்லதோர் வீணைசெய்தே அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சி.சுப்ரமணிய பாரதியார் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2010 00:00
நல்லதோர் வீணைசெய்தே
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?


விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
- சி.சுப்ரமணிய பாரதியார்
Add new comment
 
காதலுடன் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
உமா ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2010 00:00
காதலுடன்
பழகிய நாட்களின் இன்பங்களும் ,
பிரிந்த நாட்களின் துன்பங்களும் ,
என் நாட் குறிபேட்டில்
நிரம்பி உள்ளதோ இல்லையோ
என் தனிமை நீள்கிறது
நீயும் வந்து நிரப்பாமல்...

என் ரத்த நாளங்களில் எல்லாம்
உன் நியாபக சுனாமி

பிரதிபலிப்பாய் ,

சுழல் காற்றில் சிக்கிய
ஒற்றை இலையாய் நான்

மாலை நேர  நம் முதற் சந்திப்பில்
சாலை ஓர பூங்கா நாற்காலியின்
ஒரு முனையில் நீயும் ,
மறு முனையில் நானும் அமர
மஞ்சள் வெயில் பட்டு
கூசிய என் கண் பார்த்து
உன்  நிழலில் அமர சொல்லி
என் அருகில் அமர்ந்து
கரம் பிடித்தாய்

அருகில் இருந்த தருணம்
உனக்காய் நானும் ,
எனக்காய் நீயும்
என்று கூறி விட்டு தனியே இன்று
வாழ்ந்து பார்கையில் தான் வலிக்கிறது

செல்லாத காரணங்களை எல்லாம்
காரணம் சொல்லி ,சொல்லி
விட்டு கொடுக்கப்பட்ட
நம் காதலை ,
காதலுடன் ,
காதலுக்காக
விற்று கொடுத்து விட்டதாய்
புலம்பும் என் மனம்
இன்னும் கூட எங்கெங்கும்
கை நீட்டுகிறது
உன் நிழல் தேடி

- உமா
Comments (1)
 
கள்ளி (பெண்) பால்... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
சீமான்கனி ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2010 00:00
கள்ளி (பெண்) பால்
அல்லி  மலர்ந்த அரைஞான் நேரம்
கன்னி அவள் கருவறையை
கனிவாய் பதம் பார்த்து
இனிமையாய் எட்டி உதைத்து
வெளிவர விண்ணப்பம் போடுகிறாள்.

வேண்டாமடி என் செல்லமே இருட்டி விட்டது
விடியும் வரை பொறுத்திரு...
நீ பிறந்தாவது விடியட்டும் நம் விதி.
உடனே வருவதென்றால்
உன் இருட்டு விடியல்  
உன்னை இடிய  விடுமடி.
அச்சம் என்னை ஓடிய விடுமடி.
அன்னையின் அருள் கேட்டு
பொறுத்தாள்  பொன்னியின் செல்வி.

சேவல் கூவும் முன்னே
அன்னையின் அடி வயிற்றில்
அலாரம் அடித்து வரப்போவதை
உயிர் மொழியாய் வழிமொழிந்தாள்.
முட்டையை முட்டும்
பெட்டை  கோழியாய்
முட்டி மோதி பார்த்து விட்டு
முக்களோடு முனங்களையும் சொல்லி தந்தாள்  
முல்லை இவள்.
பத்து நிமிட  பாடுக்கு பின்  பனிக்குடம் உடைத்த  
பால்குடமாய் பவனி  வந்தாள்.

தலைகிழாய் தரையிறங்கி
தாரணி பார்க்க தயங்கிய   தங்கம் இவள்;
கண்னடைத்த  கண்ணகியாய்  
கண்திறக்க காலம் பார்த்து கிடந்தாள்.

சீம்பால்   சுரந்திருக்க  பச்சை
காம்பால் கறந்து வந்த கள்ளிப்பால் காத்திருக்கு;
கருத்த கிழவி ஒன்று காரியம் பார்த்திருக்கு.
காத்திருந்தது போதும் கண்விழி கண்மணியே
கதறி அழு பொன்மணியே
காது இருந்தால் அந்த
கடவுளாவது கேக்கட்டும்  உன் கதறலை.

கணநேரம் கழித்து கன்னியவள்
கதறுகையில் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ
கார்முகிலன் காது முட்டி கரைத்தது கார்முகிலை
கண்ணிர் கதறி மழையாய் உதறி விட்டான்
அந்த மந்தார பூமியிலே.  

காஞ்சு  போன கழனி எல்லாம்
கை விரித்து கவர்ந்து கொண்டது
கண மழையை.

மங்கை இவள் மனுஷி இல்லை
மகமாயி மறு உருவம் என்று
மக்களெல்லாம் மண்டி இட.
அருள் வாக்கு சொல்லும்
அம்மனின் அவதாரமாய்...
இதற்க்கு கள்ளிப்பாலே
குடித்திருக்கலாம் என் உயிரை.
அடிமனதில் அடித்து கொண்டு
வேப்பில்லை யால் வெளுத்து   
வாங்கினாள்  வேறொருவனை.

- சீமான்கனி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • உயிர் ஜெபிக்கும் ஒரு மந்திரம்
  • தாயின் மடி
  • கற்பென்பது....
  • நீ நனைந்த மழை துளிகள்
  • இப்போது
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 3 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.