| நீயில்லாமல்...! |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| பாரதி பிரியா ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 11 ஜனவரி 2012 00:00 |
![]() மணித்துளிகளின் மதிப்பு தெரியாமல்
மணி நேரஙகள் பேசிய நாட்கள்... நிமிடஙகளை கூட கடக்கமுடியாமல் தவிக்கிறேன் ... இன்று! தொட்டு செல்லும் தென்றல் கூட.. தேகம் வேகச்செய்கிறது...! முடியாத இரவுகள்... நித்திரையின்றி சித்திரையாய் வதைக்கிறது! நிலவு தேய்வதும் வளர்வதும்போலே நின் நினைவுகளால் நானும்...! சில்லறையாய் சிதறிப்போன கனவுகள் நீயில்லாமல் கனவுகளாகவே! நீ நடந்த பாதையெங்கும் என் விழிகளின் தேடல் .... நீ தந்த நினைவுகளெல்லாம் என் உயிரின் தேடல்... தேடல்கள் நீண்டு கொண்டே போகலாம்.. உயிரின் தூரம் குறைந்தும் போகலாம்.. உயிர் சுமக்கும் இந்த தேகம்.. உன் நினைவாலே.. உலகம் உள்ளவரை! -பாரதி பிரியா
Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


