• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



வினைத் தொகை அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 00:00
வினைத் தொகை,எழிலி
உறுதுன்பம்!

வயிற்றைக் குழைத்து
உடலைக் குறுக்கி
புற்றுக்குள் பாம்பாய்

மடங்கி நெளிந்து,

கால்களைப் பின்னி
முதுகின் கிரீடமாக்கி!

தாளம் தப்பாமல்
அடி சறுக்காமல்
உச்சி முதல் உள்ளங்
கால் வரை ஆட்டம்
காண  -
களைகட்டியது
கழைக்   கூத்து!

டோலக்கு அடிக்கும்
மனிதனுக்கு !

புல்லாக்குப்போட்ட
அவனின்  மனைவிக்கு!

அலுமினியத் தட்டில்
பிச்சை  திரட்டும்
சிறுவனுக்கு!

வளையத்திற்குள்
உடல் ஒடுக்கி,
உயரே கட்டிய
கயிற்றில்  கால்
பொருத்தி,
ஆகாசத்தையும்
பூமியையும்
தன் நெற்றிப் பொட்டில்
வசப்படுத்தி,
பின்னுக்கும்
முன்னுக்குமாய்
லாவகம் செய்யும்
உழைப்பாளி அவளின்
ஒவ்வொரு நாளைய
வலி
ஒருபோதும்
புரிதலில்லை!

அந்தச் சிறுமியின்
சார்பில்
நமக்கோ - ஒப்புக்கு
உச்சுக்
கொட்டலும்  ஒரு ரூபாய்
பிச்சையிடுதலும்  தவிர
பேருதவி  வேறொன்றில்லை!

- எழிலி
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.