| இல்லவை நகுதல் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| கி.கண்ணன் ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() அல்லவை சொல்லல்
ஆனந்தம் கள்ளி முற்றா இளமுலையார் உற்று நோக்குவான் சொல்லாது கைபிடித்து கட்டிலுக்கழைப்பான் தப்பென்று விளம்புவோர் தலையிலடிப்பான் மடவான்- செய்யும் செயலோ? பரத்தையர் இல்லேகி உறவாடி களிகூர்ந்து அடங்காத காளையனாய் மடக்கினான் என்னை காமமிகுதி- சுந்தர இதழ் சுவைக்க கட்டளை இட்டது கட்டுக் குழையா தளிர்மேனி கட்டிபிடித்ததில் கரைந்தது போதுமென்னும் வார்த்தை இல்லாமல்போய்- போதலையே என்றது என்பெண்மை மென்மை உவமை திண்மை உண்மை பேரின்பம் எது? “கழனி பாய்ந்த வாய்கால் நீர் நிரம்பியதும் திரும்பி கழனி நீர் வாய்கால் வருமே அதுதான்- பேரின்பம் “சமபோகம்” என்பதன் சாத்திர பெயர் சிற்றின்பம் எது? வேர்க்க வேர்க்க காரியம் முடித்து அவசரத்தில் அணுசிந்தி ஓய்ந்து போதல் இதில்- இருவருக்கும் திருப்தியின்மை “ஒருதலையான் காமம்” திருவள்ளுவர் உரைத்தது என- இல்லவைச் சொல்லி நகைத்தாள் மாலை யணிந்த மார்பன் சீர்மல்கும் மதிமுகத்தான் முறிமேனி முயங்க மாட்டேன் எதை இழந்தாலும் கற்பு இழக்கடமாட்டேன் பூப் பூத்தால் கொடிக்கு மதிப்பு கற்பு- கன்னிக்கு மதிப்பு பூ பறித்தால் வதங்கி போகும் கற்பு தவறினால் இழிவு நேரும் ஆதலின்- ஊடமாட்டேன் பூத்தப் பூ கொய்த முனைந்தால் மூடமாட்டேன்… என- இல்லவைச் சொல்லி நகைத்தாள் - கி.கண்ணன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


