| உள்ளூர் அழகி |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| முகவை சகா ஆல் எழுதப்பட்டது |
| வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:00 |
![]() ரெட்டை ஜடை பின்னலுடன் புத்தகம் சுமந்து
வருவாயே அந்த வயதிலேயே அறிமுகம் ஆகிவிட்டாய் என் காதலுக்கு நீ! நீயாய் வளர்த்து நீயாய் பறித்து நீயாய் கோர்த்து உன் கூந்தல் சூடும் பூச்சரம் தோற்றுத்தான் போகும் கடைசியில் உன் புன்னகைக்கு என் கடைக்கு வந்து கால் கிலோ சர்க்கரை வாங்க அரை கிலோ சிரிப்பாயே ஒரு மூடை சர்க்கரைக்கும் இனிப்பு தீர்ந்துவிடும் உன் அக்காவின் திருமணதிற்கு தாவணியோடு நின்றாயே மாப்பிள்ளையின் தம்பியாய் மறுபிறவி கேட்டது மனசு ஏழாம் முறையாய் நான் கொடுத்த காதல் கடிதத்தை கிழித்து போட்டு கன்னத்தில் அறைந்து சொன்னாயே "நீ ஒரு ஏழை, பிழைக்க வழி பார்" என்று ஏழரை சனி என்று வெறுத்தாலும் பரவாயில்லை ஏழை நீ என்று வெறுத்து விட்டாயே இன்று நரை முடியுடனும், இரண்டு பிள்ளையுடனும் உன் பணக்கார கணவன் பாதியில் விட்டதாய் என் அம்மாவிடம் சொல்கிறாயே என் வறுமை வசதியானது உன் வசதி இன்று உன் வாழ்வை குடிக்கிறது என் மனைவி சொல்கிறாள் என்னிடம் "ஏன் அந்த அக்கா என்னை மட்டும் ஏக்கமாய் பார்கிறார்கள் அருகிலே போனால் விழகி போகிறார்கள் " என்று மௌனமாய் சிரித்தேன் நான் உன்னிடம் வாங்கிய ஏழாவது அறை இன்று ஆற துவங்கியது - முகவை சகா |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.



Comments
RSS feed for comments to this post.