| உயிர் ஜெபிக்கும் ஒரு மந்திரம் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| எழிலி ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 15 ஆகஸ்ட் 2010 00:00 |
|
அனைவருக்கும் ஒரு கவிதையின் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!
![]() ஆசைப்பட!
மறுக்க ! அழுது மடிய ! சிரித்து மகிழ! கனவு மெய்ப்பட! கண்டங்கள் தாண்ட! இங்கேயே நிற்க! நின்று செழிக்க! நாளை வளர! வளர்ந்து கொண்டே, வளர்ந்து கொண்டே, எங்கும் பரவி வியாபிக்கும் எல்லாவற்றிலும் நாங்கள்! உன் " பெருந்தன்மை" மட்டுமே பேசப்பட வேண்டும்! தேசமே! தேசமே! சுதந்திரத்தை எமக்களித்து தியாகியாகிறாய்! 1947 -களின் பின்! நூறுமுறை மரித்தாலும் உன் மடியில்! ஒரு முறைப் பிறந்தாலும் உன் வயிற்றில்! உனக்காக உன் தலைமுறைகள். எமக்காக நீ மட்டும் தான் ! உயிர் ஜெபிக்கும் ஒரு மந்திரம்! இந்தியா! - எழிலி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


