| நீ நனைந்த மழை துளிகள் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| முகவை சகா ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() மாலை மழைக்கு
நனைந்துவிட வேண்டாம் என நீ ஓடினாய் மழையும் விடாமல் துரத்தி அணைத்தது உன்னை முதல் துளி உன் மீதும் மறு துளி மண் மீதும் விழுந்தது உன் மீது விழுந்த மழைத்துளி சிலிர்த்தது மண் மீது விழுந்த மழைத்துளி மறித்தது பனி பிரதேசத்தில் கூட பார்க்கும் வரம் கிடைக்குமா தெரியாது உன் போன்ற பனிப்பாறை மழையில் நனைவதை உன்னைவிட உன் ஆடைக்கு தான் குளிர் அதிகம் போல உன்னை இறுக்கி அணைத்தது மரத்தின் அடியில் ஒளிந்துகொண்டாய் மரத்தில் பட்ட துளிகளெல்லாம் மண்மேல் விழாமல் உன் மேல் விழுந்தது இன்று உன் குடைக்கு விடுமுறை அதே போல உன்னை ரசித்து நடந்த என் நடைக்கும் விடுமுறை உன்னையே நீ இறுக்கி கட்டி கொண்டாய் ஒருசில நிமிடம் உன் இறுக்கத்தின் இடையில் இருப்பதாய் உணர்ந்தேன் குளிரில் சிலிர்த்தாய் என் பாவங்களும் சாபங்களும் புண்ணியமானது ! தயவு செய்து நீ நனைந்ததை நினைத்து வருந்தாதே! உன்மேல் விழுந்த எத்தனையோ துளிகளை நனைத்துவிட்டாய் அதுதான் உண்மை! - முகவை சகா |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


