| உயிரின் வலி |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| எஸ் வைத்தீஸ்வரன் ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 05 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() இடி இடிக்கிறது
பாலத்தின் மேல், இடையிடையில் ரயிலோட்டத்தால் அதனடியில் இரும்பை நீட்டி வளைத்து தீப்பொறி பரக்க ஓலமிடும் வெல்டிங் கடைகள், படை வரிசை போல். அதை யொட்டிய வளைவில் அரைத்து மாளாமல் அலறுகிற மாவு யந்திரங்கள் இவை நடுவில், உடம்புக் கடையில் தொங்கும் ஊதிகள் பலூன்கள் பூனை நாய், பொம்மைகள் கூச்சலிட, புழுதியில் பிழைப்புக்கு நகரும் மனிதக் கால்கள் ஆயிரம். ஈதத்தனைக்கும் அடியில் இரண்டு முழக்கந்தலுக்குள் சுருண்டு முனகுகிறானே நிஜமாக ஒரு மனிதன், அவல் ஈன ஒலிகள் அபோதும் விழக்கூடும், ஏதாவது காதுகளில் ? ஏற்கெனவே எறும்பு மொய்க்கத் தொடங்கிவிட்டது, அவன் வாய் முனையில்... - எஸ் வைத்தீஸ்வரன்
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


