| இப்படியும் ஒரு சமாளிப்பு |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| எழிலி ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 00:00 |
![]() எனக்கு இப்பொழுது
மூன்று வயதாயிருக்கலாம்! அப்பா எங்கே என்று அம்மாவைக் கேட்டால், தப்பாமல் இந்தப் பொம்மையைக் காண்பிப்பாள்! அவர் நினைவாய் எனக்கு இதுவென்றால், என் நினைவை எதைக் கொண்டு அவரிடம் உறுதி செய்வாள்? கண்ணீர் தோய்ந்த தன் புடவைத் தலைப்பால் என் முகந்துடைப்பாள்! எங்கோ இருப்பதாய் ஒப்புக்குச் சொல்லி வைப்பாள்! எப்போ வரும் எனக் கேட்டால் - என் உச்சி முகர்ந்து தலையைத் தடவுவாள்! சாமிக்குத்தான் தெரியும் அம்மாவின் சங்கடமும் சமாளிப்பும்! எப்படியும் ஒருநாள் அப்பா வரும்! - எழிலி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


