| மெல்லினம் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| புதுவை பாமல்லன் ஆல் எழுதப்பட்டது |
| திங்கட்கிழமை, 28 ஜூன் 2010 00:00 |
![]() மெல்லிய மரணம் அரங்கேறும் மெளன இலக்கிய மன்றம் - காதல் சத்தமின்றி நிகழுமோர் யுத்தகாண்டம் சத்தியத்தில் சங்கமிக்கும் உறவுகோலம் - அது நித்தியத்தில் உறுவாகும் சாமவேதம் முக்தியினை முன்காட்டும் முழுமைகீதம் விழிவழி வருதா காதல் மொழி வழி தருவதா விழைவு தனில் நுழைவதா விந்தை நகையினில் மலர்வதா விழும் சிந்தையில் சிறப்பதா விளங்காப் பொருளில் புலர்வதா விளையும் பொழுதே உனையறி வீழாதென்றும் உண்மைக் காதல் - புதுவை பாமல்லன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


