| வலி தந்த வழி... |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| சீமான்கனி ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 07 ஜூலை 2010 00:00 |
![]() தொலைந்துவிடு என்று சொல்லியும்
திருப்பி அழைக்க முற்படுகையில் திரும்பத் திரும்ப சொல்லவேண்டியதை பதியச்சொல்கிறாள் பதில் புதியவள் பேசமுடியாத ஒருத்தி. விதியின் வழியையும் வலியையும் வாழ்த்துகிறேன் காதலை மட்டுமல்ல காயங்களையும் - அவள் விழிகளில் வைத்ததால். ஏ...காதலே - நீ என் காயங்களுக்கு களிம்பு போடவேண்டாம் கண்களுக்குள் கத்தி எறியமலாவது இரு. இன்று.. வெண்ணிலா வெள்ளி தீ தூவி - என் தேக விறகை குளிர்காய எரித்துக் கொண்டது. நெருப்பில் பிறந்து பறந்த வெள்ளி தீப்பொறிகளெல்லாம் வானேறி விண்மீன் வேஷம் போட்டு கொண்டன. கண்கள் இரண்டும் - சேர்த்து வைத்த தூக்கத்தை கண்ணீர் துளிகளில் செலவுசெய்து கொண்டன. மூச்சிறைத்த இடைவெளி நொடிகளில் உயிர் கேணியின் ஒவ்வொரு சொட்டாய் இறைத்து குடித்து கொண்டது - அவளின் நினைவுக் கோப்பைகள். சொல்லாதே என்று சுட்டுவைத்தலும் துடிக்கத்துடிக்க அவள்பெயரை மட்டுமே சொல்வேன் என்கிறது சொரனைகெட்ட இதயம். என் நிசப்த நீர்வெளியில் நொடிக்கு ஒருமுறை கல்லெறிந்து விளையாடுகிறது விடைபெறுவதாய் - அவள் விட்டுசென்ற கடைசி வார்த்தைகள். அதன் சுனாமி பேரலைகள் இதயக்கோட்டையை தகர்த்து ரத்தச்சகதியாய் கண்களின் கறைகடந்து கண்ணங்கள் வழியே வழிகிறது. அவள் கரி பூசிய முகத்தை கண்ணீரால் மட்டுமே கழுவ முடியும்... - சீமான்கனி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


