• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



இரவல் இரவுகள் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 25 ஜூன் 2010 00:00
இரவல்  இரவுகள்
எல்லாமே முடிவதாய்
நான் உணர்ந்தேன்!

இந்த எழுபத்திரெண்டு
வரை!
என் தூக்கம்,  என் உணவு,
என் பாவனைகளில்
நான் தோற்றுப்போனதே
கிடையாது!

எல்லா மகிழ்ச்சிகளும்,
வேதனைகளும்
பழக்கப்பட்டவைகளே!

தற்போதைய  நாட்களில்
என் பார்வைக்  குறைவு,
பசியின்மை, ரத்தக் கட்டிகள்,
மாத்திரைகள் உடலுக்குள்
செய்யும்  மாயஜாலம்,
யார் யாரோ வந்துபோகும்
ஆஸ்பத்திரி முதல்
மாடியின்    கிழக்கில்
என் திரை மூடிய அறை,

விரைவாய்ப் பரவும்
வேதியல் வாசம்,
தெர்மாஸ்  குடுவை
சுடுதண்ணீர், காபி,
உப்பில்லாதக் கூழ்,
இயற்கை  உபாதைக்கு
மறைவாய்ப் பாலிதீன் பை!

என் தலைமுறைகளின் 
உறக்கம், 
உணவு, 
மகிழ்ச்சி, 
சௌஹரியம்,
தற்காலிகமாய்-
என்னால்   தடைப்பட...

நிச்சயமாய் நான் இரவல்
இரவுகளில்  தவிக்கிறேன்!
என்பது மட்டுமே  உண்மை  -
மரணம்  வரும்
வரையில்!

நான் உறங்குவதுமில்லை,
விழிப்பதுமில்லை!
- எழிலி
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.