| கடுதாசி |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| எழிலி ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 16 ஜூன் 2010 00:00 |
![]() செம்பவல்லிஅறிஞ்சங்குப்பம், (ஆறாம் வகுப்பு)
அன்புள்ள அப்பாக்கு, பள்ளிக் கூடம் தெறந்தாச்சு! பாடமெல்லாம் புதுசாச்சு! பள்ளிக்கூட உடுமாத்துத் துணியாட்டம் பாடம் மொத்தமும் ஒண்ணாச்சு! பட்டணத்தத்தாண்டி நம்ம ஊரும் தெரிஞ்சாச்சு! நம்மூரு இன்னைக்கு பேப்பர்ல வந்திருக்கு ! என்னைக்காவது ஒரு நா(ள்) என் படமும் டி.வி.யில! இன்னாரு மகதா(ன்) மாநிலத்துல மொதன்னு அன்னைக்கு ஒம்பேருக்கும்,நம்மூருக்கும் பெருமை வரும் நிச்சியம்! ' சமச்சீர்' கல்வி சகலருக்கும் பொதுவாச்சு! சத்துணவு (திட்டம்)போல புத்திக்கு ஊட்டமாச்சு! என்ன நா(ன்) சொல்லுதேன்னு ஒனக்குப் புரிஞ்சிதோ தெரியலை,நீ அடுத்தமொற வரையில கட்டாயம் நா(ன்) பேசுவேன் இங்கிலீசுல! புறப்படறேன் இப்போ நேரமாச்சு, ஆறாம் வகுப்புப் புத்தகம் வாங்கணும் நாழியாச்சு! பெறுநர், கொளுத்து - கோயிந்தன், துபாய். - எழிலி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


