• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



கடுதாசி அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 16 ஜூன் 2010 00:00
கடுதாசி,எழிலி


செம்பவல்லிஅறிஞ்சங்குப்பம்,
(ஆறாம் வகுப்பு)

அன்புள்ள அப்பாக்கு,

பள்ளிக் கூடம்  தெறந்தாச்சு!
பாடமெல்லாம் புதுசாச்சு!

பள்ளிக்கூட
உடுமாத்துத் துணியாட்டம்
பாடம் மொத்தமும் ஒண்ணாச்சு!

பட்டணத்தத்தாண்டி  நம்ம
ஊரும்   தெரிஞ்சாச்சு!

நம்மூரு இன்னைக்கு
பேப்பர்ல வந்திருக்கு !

என்னைக்காவது ஒரு நா(ள்)
என் படமும் டி.வி.யில!

இன்னாரு மகதா(ன்)
மாநிலத்துல மொதன்னு
அன்னைக்கு
ஒம்பேருக்கும்,நம்மூருக்கும்
பெருமை வரும்  நிச்சியம்!

' சமச்சீர்'  கல்வி
சகலருக்கும் பொதுவாச்சு!
சத்துணவு  (திட்டம்)போல
புத்திக்கு ஊட்டமாச்சு!

என்ன நா(ன்) சொல்லுதேன்னு
ஒனக்குப்
புரிஞ்சிதோ தெரியலை,நீ
அடுத்தமொற   வரையில
கட்டாயம்   நா(ன்)
பேசுவேன்  இங்கிலீசுல!

புறப்படறேன்
இப்போ  நேரமாச்சு,
ஆறாம் வகுப்புப்
புத்தகம்
வாங்கணும் நாழியாச்சு!


பெறுநர்,
கொளுத்து - கோயிந்தன்,
துபாய்.

- எழிலி
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.