| நீ... நான்... காதல்... |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| முகவை சகா ஆல் எழுதப்பட்டது |
| திங்கட்கிழமை, 14 ஜூன் 2010 00:00 |
![]() சினிமா பார்த்துவிட்டு வெளியேறியதும் போகும் வழி எங்கும் படத்தின் காட்சிகளை பேசிக்கொண்டே செல்லும் மக்களைப்போல உன்னை பிரிந்ததும் உன்னை பற்றியே பேசிகொள்வேன் தனியாய் எதேச்சையாக ஒருமுறை என்னை பார்த்திருப்பாய் நீ மறுபடியும் பார்க்க மாட்டாயா என மரண பார்வை பார்துகொண்டிருபேன் நான் " அவளிடம் அப்படி என்னடா இருக்கிறது " என்று என் நண்பர்கள் கேட்டால் அன்று முழுதும் தூங்காமல் சந்தோசபடுவேன். எல்லோரும் ரசிக்கும் சராசரி பெண்ணாய் இல்லாமல் நான் மட்டும் ரசிக்கும் சமத்து பெண்ணாய் இருக்கிறாயே என்று உன்னை அழகியாக காட்டியது என் கண்கள் பேரழகியாக காட்டியது என் காதல் தான் என் அருகில் இருக்கும் எல்லோரிடமும் பேசிவிட்டு என்னிடம் மட்டும் ஒரு பார்வை உதிர்த்து போவாய் எனக்கு தெரியும் அம்மனின் அருள் எபோதுமே பக்தனுக்கு தான் அருகிலே இருந்து அர்ச்சனை செய்யும் அர்ச்சகனுக்கு இல்லை அருகிலே இருப்பவர்கள் அர்ச்சகர்கள் நான் உன் பக்தன் என் கடைசி வாழ்க்கை வந்தாலும் என் காதலை சொல்லமாட்டேன் உன்னிடம் கல்யாண நாள் குறித்தால் சொல்லி அனுப்பு மொய் எழுதும்போது என் பெயருக்கு நேரே உயிர் என எழுத வருகிறேன் - முகவை சகா |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.



Comments
RSS feed for comments to this post.