| மழைக்கு தெரியாது |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| சாந்தினி வரதராஐன் ஆல் எழுதப்பட்டது |
| வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2010 00:00 |
![]() பாவம் மழை
இடியும் மின்னலும் கீறும் வலி பொறுத்து மண்ணுக்காய் நீளும் கரங்களை மறுக்கும் மனங்கள் உண்டென்று மழைக்கு தெரியாது மனிதர்கள் குணத்தால் மாறுபட்டவர்களென்று. வீடு நனையுதென்றும் விறகு புகையுதென்றும் ஆடை உலரவில்லையென்றும் முகம் சுளிக்கும் மனங்களை மழைக்கு தெரியாது. மழை நினைத்திருக்கும் மனிதர்கள் மகிழ்வார்களென்று மண்ணும் மரங்களும் மலர்களும் மலைகளும் சின்ன மழலைகளும் மகிழ்வார்கள் மழைகண்டு முகம் சுளித்து குடை விரித்து கதவடைக்கும் மனிதர்களுக்காய் ஒளி உமிழும் உயிர் துறந்து முகம் கறுத்து வலி பொறுத்து கரம் கொடுக்கும் மழைக்கு தெரியாது மனிதர்கள் மனங்காளல் மாறுபட்டவர்களென்று. - சாந்தினி வரதராஐன் (நன்றி : வார்ப்பு) |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


