• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



முதலைக் கண்ணீர் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
பாலக்குமாரன் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 13 மே 2009 00:00

 முதலைக் கண்ணீர்

மரம் செடி இலைகள் போல
மண் வாழும் உயிர்கள் போல
மூச்சுவிடத் தெரிந்த முதலை
நீருக்குள் எதற்காய் போச்சு
கூடுகள் குகைகள் இன்றி
நீரடியில் உறங்கலாச்சு.

நரிக்குகையில் சிங்கம் மோதும்
குயில் முட்டை காக்கைக் கூட்டில்,
காக்கைகள்? மனிதர் வீட்டில்
புற்றுமண்ணில் எறும்பு கட்ட
பாம்புக்கு அதுவே கட்டில்
உன் சுவர் எனது வீட்டில்
என் கலப்பை உனது வரம்பில்
அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும்
எண்ணமே முதலைக்கில்லை.

 நீரடி எல்லாம் இங்கே
பூமித்தாய் கருப்பைப் போல
எல்லைகள் இல்லா தேசம்
திசைகூட அழியும் ஆங்கே
மனிதர்கள் பிரித்துப் போட்ட
நிலம் பார்த்து சோகத்தோடு
அழுவதே முதலைக் கண்ணீர்
தெரிந்தபின் குறை சொல்லாதீர்.

- பாலக்குமாரன்

 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.