| நமது உரிமைக்கான பட்டாணைகள் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| சு.மு.அகமது ஆல் எழுதப்பட்டது |
| வெள்ளிக்கிழமை, 04 ஜூன் 2010 00:00 |
![]() உங்கள் தூரிகைகளுக்கான மசி இப்போது தான் குடுவையில் நிரப்பப்படுகிறது கடலளவு எண்ணங்களில் கடுகளவேனும் தீர்ந்திடுமென்ற நம்பிக்கை யாரோ யாருக்காயோ வென்றெடுத்ததாய் அது நம் செயல்களை நிர்ணயிக்கும் கொடுஞ்செயல்களின் ஆகிருதி தரவுகளில் புனைவாய் பதியப்பட்டு எழுச்சியின் பேருரை எங்கும் வியாபிக்க விதர்த்துப் போகும் நிலைக்களன்கள் நீங்கா நினைவுகளூடே புதுப்பதியனாய் துளிர்த்தெழ இன்னும் நிரம்பாமலேயே வழிந்தோடுகிறது எதிர்பார்ப்புக்களின் அலையோசை கானல் நீர்ப்பரப்பின் மீது தத்தளிக்கிறது நமது உரிமைக்கான பட்டாணைகள் - சு.மு.அகமது |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


