• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



ஆனந்த அருவி அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
பாவண்ணன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 02 மே 2009 00:00

அடர்ந்த மனஇருட்டில்
அடுக்கடுக்கான மலையிடுக்கில்
எங்கோ அடைபட்டுக் கிடக்கிறது
ஆனந்த அருவியின் ஊற்று
பாயும் இடமெங்கும் குளுமை
பனிச்சாரல் ததும்பும் புகைமுட்டம்
தாவி இறங்கும் வழிநெடுகத்
தழுவிப் புரளும் குளிர்த்தென்றல்
பாறையோ மரமோ செடியோ
எதிர்ப்பட்டதை இழுத்தோடும்
ஊற்றுக் கண்ணில் துருவேற
ஊருராய் அலைகின்றேன்
சுமைகூடி வலிகூடி
இமைமுடாது திரிகின்றேன்
உச்சிமலை அருவியின்கீழே
உடல்நனைய மனம்நனைய
ஒற்றைக் கணப்பொழுதில்
துருவுதிர தடையுடைய
பொங்கி வழிகிறது ஆனந்த அருவி
தோள்தழுவி முகம்தழுவி
இரண்டு அருவிகளும் இணைந்து வழிகின்றன
இன்பச் சிலிர்ப்பை
எடுத்துரைக்க மொழியில்லை
ஆதிப் பாறையென
அங்கேயே நிற்கின்றேன்
அனைவரையும் தாண்டி
வழிந்தோடுகிறது அருவி

-  பாவண்ணன்

 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.