• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • முதிர் இளைஞா...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
முதிர் இளைஞா... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சு.மு.அகமது ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2010 00:00
முதிர் இளைஞா
இருளடர்ந்த அறையின்
வெக்கை பிதுக்கும் தருணங்களில்
கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய்
பாரம் சுமக்கும் மனது

வலியின் உள்வெளியில்
சிரையாய் புடைத்த நினைவு
நிமிரா நாயின் சுருண்ட வாலாய்
மரவட்டையின் கணக்கற்ற கால்களின் நீட்சியாய்

யதார்த்த பரிமாற்றத்தின் பகிர்ந்தளிப்பு
நுகர்ந்து செறிக்கும் நிலைமாற்றம்
உணர்ந்து திளைக்கும் பொழுதில்
அருகாமையில் புணரலின் புதுமொழி

வெளிச்சப்பரவுதலில் மிரண்ட
பிணைந்த பல்லிகளின் கண்களில் காமத்தின் மிச்சம்

அனிச்சையாய் கைகள் துழாவ
விளக்கின் உமிழ்தலாய் பரவுகிறது
உணர்வுகளுக்கான வடிகால்
கறுமை விரட்டும் வெண்பட்சியாய்.

- சு.மு.அகமது
Add new comment
 
வாராமைக்கு அழிதல் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
கி.கண்ணன் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 00:00
வாராமைக்கு அழிதல்
மானசிகனே
எங்கு போனாய்!

உடம்பிலிருக்கும்
உயி​ர் காணோம்

இமை சேர்க்கும்
துயில் காணோம்

மூவேளை பசிக்குமேயந்த
குடல் காணோம்

நீதந்த நாணம்
முகத்தில் காணோம்

பருக்கள் இரண்டில்
இருக்க காணோம்

நெய்யற்ற விளக்கு
ஒளியிடுவதில்லை

பெண்ணரசி மேனியில்
சுயநினைவில்லை

சுயம் புடைபெயர்ந்து
மாயமாய் போனது

போனதால்…

பொன்னிறம் பசலை
உடுத்திக் கொண்டது

வந்தால்…

ஓர்கட்டை ஆவேன்
வரமாட்டானாயின்-
உடன்கட்டை ஏறுவேன்

அவர்-
கைபடா பூச்சர​ம்

மண் தின்னட்டும்
தீ தின்னட்டும்

வலக்கண் துடிக்கிறது
வருவானா?

இடக்கண் வழியே
வெளியேறி போவானா?

எங்கு போனாய்…

“திரும்புவேன் என்றீர்

ஆண்கள் சொன்னால்

அதற்கு-
வாராது போவேனென்று
பொருளா”?

நம்ப வைத்தீர்

கன்னி விழியிற்
அம்பு வைத்தீர்

தீ சாட்சியோடு
அம்மி மிதித்து
திருமணம் முடிப்பாய்
என்றிருந்தேன்
உன்மனமே-
அம்மியாய் இருப்பதை
இக்கணம் கண்டுணர்ந்தேன்.

ஆடவன் காதல்
உடலோடென்பது மெய்தான்

உடலே மெழுகாய்
உச்சியே திரியாய்

காதல் தீயினில்
கடைசிவரை-
உருவழிப்பது பெண்தானே!

- கி.கண்ணன்.
Add new comment
 
இரு பக்கங்கள் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 28 ஜூலை 2010 00:00
இரு பக்கங்கள்
காலையின் ஒளியில்
கண்கள் திறக்கும்
கமலங்கள் ஒரு பக்கம்
மாலையின் இருளில்
சேலையை அவிழ்க்கும்
குமுதங்கள் ஒரு பக்கம்

தண்ணீர் தேடித்
தவிக்கும் வேர்களின்
தாகங்கள் ஒரு பக்கம்
புண்ணீர் நாறும்
பூமியில் பெய்யும்
மேகங்கள் ஒரு பக்கம்

விழிகள் அணைந்தவர்
சமாதியில் எரியும்
விளக்குகள் ஒரு பக்கம்
வழியினில் இருளில்
ஒளியினுக் கேங்கும்
விழிகள் ஒரு பக்கம்

கரிந்த சிறகுடன்
சுடரில் துடிக்கும்
விட்டில்கள் ஒரு பக்கம்
விரிந்த சிறகுடன்
கூண்டில் துடிக்கும்
பறவைகள் ஒரு பக்கம்

புத்தனுக் காகப்
பொன்னிழல் விரிக்கும்
போதிகள் ஒரு பக்கம்
சித்தன் ஏசுவின்
செம்புனல் குடிக்கும்
சிலுவைகள் ஒரு பக்கம்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்
Add new comment
 
மின்னல் விழுதுகள்! அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
ரசிகன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 24 ஜூலை 2010 00:00
மின்னல் விழுதுகள்
ஒரு மஞ்சள் பூசிய
மாலை வேளை சந்திப்பில்...
வெள்ளுடை விலாவரியாய்...
வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு
நெளிந்து கொண்டிருந்தது
அவளும் காதல் சார்ந்ததவையும்!
பக்கவாட்டில்
பசிக்கடங்கிய மழலையாய்
மடி சாய விழைந்தபடி நான்!
இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்
மீறப்பட்ட வண்ணம்...
சலித்துப்போயிருந்தன
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பேச்சுக்கள்...
ஏக்கங்களின் மிகுதியில்
மின்னல் கீற்றுகள்
உள்ளுக்குள்
வெட்டவெளிச்சமாய் பீய்ச்சியடிக்கப்படவும்
விரசங்கள்
வீரியம் காட்டிடவும்
சட்டென சுதாகரித்தவளாய்
எழுந்து நடை பழகுகிறாள்...
நிஜத்தை மறந்துவிட்ட நினைப்பில்
வந்தவள் என் பக்கம் வந்து
இடைக்கும் இடது கைக்குமான
தன் இடைவெளியை
என் வலது கைகொண்டு
இறுக்க அணைத்து நிரப்பியபடி
மீண்டும் நடைபயில்கிறாள்!

- ரசிகன்
Add new comment
 
என் பெயர்... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
இனியா ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2010 00:00
என் பெயர்

சற்றும் அடங்காத
சாலை அது - என்
இருப்பு அங்கே
யாரையும் கலைக்காமல்,
தினமும் வரும் வழக்கமாய்
நடைபாதையில் நான்,
நினைவுகள் மட்டும்
எங்கோ தூரமாய்...
அங்கே ரசித்தவை
பழங்கதைகள் ஆகின
என் கண்கள் அலைபயும்
பழைய முகங்கள் தேடி
அன்று நாம் நின்ற இடத்தில்
இன்று நான் மட்டும் தனிமையில்...

நீ என்னோடு இருந்த போதும்
நானாக மட்டுமே நான் இருந்தேன்,
தனியே என்னை விலக்கிய போதும்
துளி மாற்றம் இல்லை என்னுள்.
இருந்தும் பிறரிடம் சிறு மாற்றம்...
நாமாய் இருக்கையில் 'மணி' என்றவர்
இன்று எனை அழைக்கும் பெயர் 'தெருநாய்'!

- இனியா
Add new comment
 
கோரமுகம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
ப.மதியழகன் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 22 ஜூலை 2010 00:00
கோரமுகம்

பொம்மை விளையாட்டு
காதல் விளையாட்டு
வியாபார விளையாட்டு
மது விளையாட்டு
மங்கை விளையாட்டு
மழலை விளையாட்டு – என
ஏதேனும் ஒரு போதை
எந்நாளும் தேவைப்படுகிறது
வாழ்க்கையின் கோரமுகத்தைக்
காணச் சகிக்காமல்
முகம் புதைத்துக் கொள்வதற்கு.

- ப.மதியழகன்
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • உரிமை
  • உன்னையே நினைப்பதனால்...
  • வாய்ப்பாடு
  • மழலையின் மொழியில்
  • கல்லும் முள்ளும்...
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 56

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.